சிபிஐ புதிய இயக்குனரை நியமனம் செய்வதில் தாமதம்

சிபிஐ புதிய இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் சிபிஐ க்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் மூன்று நபர் கொண்ட தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.ஆனால், கூட்டத்தின் நிறைவில், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தேர்வுக்குழு கூட்டம் மீண்டும் நடைபெற இருக்கிறது.

அதுவரை இடைக்கால சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் பணியை தொடர்வார். தேர்வுக்குழுவில் இடம்பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சிபிஐ இயக்குனர் நீக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருப்பதால், தமக்கு பதிலாக மூத்த நீதிபதி சிக்ரியை குழுவில் இடம்பெற செய்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version