மாவட்ட அளவில் டேக்வான்டோ போட்டிகள்-800 மாணவ,மாணவிகள் பங்கேற்பு

தூத்துக்குடியில் மாவட்ட அளவில் நடைபெறும் டேக் வான்டோ போட்டியில் 800 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

தூத்துக்குடியில் மாநில அளவிலான டேக்வன்டோ போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டிகளில் நெல்லை, குமரி, மதுரை, கோவை, சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இருபது மாவட்டங்களை சேர்ந்த 800 பேர் கலந்து கொண்டுள்ளனர். 11 வயதுக்கு உட்பட்டோர், 14 வயதிற்கு உட்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Exit mobile version