18ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள்

பெரிய நாயக்கன் பாளையம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் எம்.எம்.வி.சி. அணி கோப்பையை கைப்பற்றியது.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த வீரபாண்டி பேரூராட்சியில் பொங்கல் விழா மற்றும் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 20க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டியில் கவி வாலிபால் கிளப் அணியும், எம்.எம்.வி.சி. உஜ்ஜையனூர் கிளப் அணியும் மோதின. இதில், இரண்டுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் எம்.எம்.வி.சி. உஜ்ஜையனூர் கிளப் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Exit mobile version