புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

புதுக்கோட்டையில் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஏராளமான சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. மன்னர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிறந்த வீரராக தேர்ந்தெடுப்பவர்கள் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு பயிற்சிகளுடன் உணவு, மற்றும் உடைகள் உள்ளிட்டவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருவதாகவும், பங்கேற்கும் வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version