பெண்களுக்கு தற்காப்புக் கலை கற்றுத் தரும் கேரள அரசு

கேரளாவில் பெண்களுக்கு தற்காப்பு கலையை பயிற்றுவிக்கும் விதமாக பெண்கருத்து என்ற பெயரில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

கேரள அரசு பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள  களரி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. பெண்கருத்து என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்தப் பயிற்சி வகுப்பில் பெண்களுக்கு களரி, கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்த வகுப்புக்கு கேரளா முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள் வகுப்புகளில் பங்கேற்று களரி பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்தப் பயிற்சியினால் தங்களது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version