அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜர்

பிரதமர் மோடி குறித்து தவறாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜராக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி குறித்து விமர்சித்து இருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் அஜராகவில்லை. இந்த நிலையில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சூரத் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் ஆமதாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கிலும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version