திருமணம் முடிந்து இந்தியா திரும்பிய ரன்வீர்-தீபிகா தம்பதி

இத்தாலியில் திருமணத்தை முடித்து இந்தியா திரும்பியுள்ள ரன்வீர்-தீபிகா ஜோடிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருமணத்திற்காக இரு தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். நவம்பர் 15 ஆம் தேதி, லேக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில், பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து, ரன்வீர்-தீபிகா தம்பதி இந்தியா திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நவம்பர் 21 ஆம் தேதி பெங்களூருவிலும், 28 ஆம் தேதி மும்பையிலும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

 

Exit mobile version