தென்காசியை தனி மாவட்டமாக அறிவிப்பு :மருத்துவ சங்கம் தமிழக அரசை பாராட்டும் விழா

நெல்லையில் தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தமிழக அரசை பாராட்டும் விழா நடைபெற்றது.

சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்தார். இதற்கு அனைவரும் ஆதரவு அளித்து வரும் நிலையில் தென்காசி வர்த்தக சங்கம், வழக்கறிஞர் சங்கம் என பல்வேறு சங்கங்களும் இதற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் தென்காசியில் இந்திய மருத்துவ சங்கத்தின் குற்றாலம் கிளை சார்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான மருத்துவர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version