குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 1200 வீடுகள் கட்ட தீர்மானம்

கோவை தென்கரை பேரூராட்சியில் ஆயிரத்து 200 வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 106.31 கோடி மதிப்பீட்டில் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. இந்தப் பகுதியில் காரில் செல்ல போதிய வசதி இல்லாததால் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நடந்து சென்று பூமி பூஜையில் கலந்து கொண்டார். இதேபோல் பசினம்பதி பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.6.88 கோடி மதிப்பில் அமையவுள்ள அடுக்குமாடி குடியுருப்புக்கான கட்டிடப் பணிகளையும் துவக்கி வைத்தார். மத்வராயபுரத்தில் உள்ள 27 ஆதிவாசி குடும்பங்களுக்கு ரூ 65 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்

Exit mobile version