கடன் தொல்லை- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கடன் தொல்லையால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரயில்நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த உத்திராவதி கடன் தொல்லை அதிகரித்ததால், சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் குருவாயூர் விரைவு ரயிலில் ஏறி கொடைக்கானல் சென்றுள்ளார். இந்தநிலையில், கொடைக்கானல் சாலைக்கு சென்ற அவர், ரயிலின் முன் பாய்ந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடலையும் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Exit mobile version