ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டபேரவையில் உரையாற்ற வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பேரவை தலைவர் தனபால் வரவேற்றார். பின்னர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தமிழில் கூறிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை நிகழ்த்தினார்.

இந்நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 2 ஆம் நாளான இன்று நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் வரும் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version