சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கிறார்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி கூடிய நிலையில், பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, சுற்றுலா கலை மற்றும் பண்பாடு துறை, இந்து சமய அறநிலையத் துறைகள் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கிறார். துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார். மாலை நடைபெறும் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி, நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர்.

Exit mobile version