சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வனம், சுற்றுச்சூழல் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. நேற்று பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மீது விவாதம் நடைபெற்றது. இன்று, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. விவாதத்திற்குப் பின்னர், அத்துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் தங்கமணி,  பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.

Exit mobile version