சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்

சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

சடப்பேரவையின் இன்றைய கூட்டம் காலை, மாலை என இருவேலை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் கேள்வி நேரமும், அதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். இதையடுத்து போக்குவத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், கேள்விகளுக்கு பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

Exit mobile version