கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு

வரலாறு காணாத மழை காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. நான்கு நாட்களாக மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதனால், பம்பை, அச்சன்கோவில், மீனச்சல், மணிமலை  உள்ளிட்ட ஆறுகளில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். வயநாடு, இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில்  ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 2 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மழை. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியை ராகுல் காந்தி பார்வையிட்டார். 

Exit mobile version