கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா மரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ், முக்கிய தலைவர்கள், பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஸ்பெயின் இளவரசி மரியா தெரசாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அரச குடும்பங்களில் முதல் உயிர்பலி கொரோனாவால் நிகழ்ந்துள்ளது. மரியா தெரசாவுக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version