சூரத்தில் 5வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி தற்கொலை

குஜராத் மாநிலம் சூரத்தில் 5ஆவது மாடியில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வாபி நகரைச் சேர்ந்த வியாபாரி பியூஷ் பச்சிகர் என்பவர், அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். திடீரென விடுதியின் 5ஆவது மாடிக்குச் சென்ற பியூஷ், அங்கிருந்த பெயர்ப் பலகையின் மீது ஏறி நீண்ட நேரம் நின்றிருந்தார். கால்கள் நடுங்கியபடி, கீழே குதிப்பதா, வேண்டாம் என அச்சத்துடன் பியூஷ் நின்றிருக்க, அங்கிருந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற அவரைக் காப்பாற்றாமல் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் சாலையைக் கடந்து சென்றனர். கட்டடத்தின் உச்சியில் நீண்ட நேரமாக நின்றிருந்த பியூஷ், பின்னர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Exit mobile version