பான் எண்ணை ஆதாராருடன் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு

பான் எண்ணை ஆதாராருடன் இணைப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, மத்திய நேரடி வரி விதிப்புகள் வாரியம், பான் எண்னை ஆதாராருடன் இணைப்பதற்கான கால அவகாசம், செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்த காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து பரிசீலித்த நேரடி விதிப்புகள் வாரியம், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தர விட்டுள்ளது.

Exit mobile version