கடம்பூர் வனப்பகுதிக்குள் இறந்து கிடந்த ஆண் யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உடல் நலக்குறைவால்  ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணிக்கு சென்றபோது, யானை இறந்து கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின், துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்ததில், வயிற்றுப்புண் நோயால் யானை அவதிப்பட்டது  தெரியவந்தது. 

Exit mobile version