நாளை மறுநாள் முதல் ஜல்லிக்கட்டு : ஏற்பாடுகள் தீவிரம்

நாளை மறுநாள் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பாலமேட்டில் வாடிவாசல் பகுதியில் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் gallery அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காளைகள் முறையாக வாடிவாசல் வருவதற்காக பேரேடுகள் அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய காளைகளுக்கு இன்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக நேற்று மாலை முதலே காளைகளுடன் அதன் உரிமையாளர்கள் வரத்தொடங்கினர். ஏராளமான பெண்களும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து டோக்கன்களை பெற்றுச் சென்றனர்.

Exit mobile version