தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்

சென்னையில், தகாத உறவை கண்டித்த தாயை, மகள் எரித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த துர்கா நகரில் சேர்ந்தவர் மூதாட்டி பூபதி. கடந்த 7 ஆம் தேதி, எரியும் தீயுடன் வீட்டில் இருந்து வெளியில் ஓடிவந்த இவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பூபதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், காவல்துறை விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. பூபதியின் மகள் நந்தினி என்பவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. நந்தினி வேறொரு நபருடன் பழகி வந்ததை தாய் பூபதி கண்டித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நந்தினி, தூங்கிக்கொண்டிருந்த தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில், நந்தினி மற்றும் அவருடன் பழகி வந்த முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version