சோதனைச்சாவடியில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர் மகள் திருமணம்!

இ-பாஸ் கிடைக்காததால் கேரளாவின் ஆரியங்காவு சோதனை சாவடியில், முன்னாள் இராணுவ வீரரின் மகள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

திருச்சூரை சேர்ந்த நிகில் என்ற இளைஞருக்கும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகளான ஜோதிகா என்பவருக்கும் ஊரடங்கிற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி அவர்களது திருமணம் பாளையங்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஊரடங்கால் மணமகனின் குடும்பத்தாருக்கு இ-பாஸ் கிடைக்காததால், தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச்சாவடியில் மணமக்களின் பெற்றோர்கள் உட்பட 7 பேரின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

Exit mobile version