மாமியாரை தலையில் கடித்த மருமகள் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், குடும்பப் பிரச்சனையால் மாமியாரை தலையில் கடித்த மருமகள் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள தொழில்பேட்டை மின் நகரை சேர்ந்தவர் நாகேஸ்வரி. இவரது மகன் சரவணகுமாருக்கும், மருமகள் கல்பனாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சரவணகுமார் தனது தாய் நாகேஸ்வரியுடன் வசித்து வந்துள்ளார். சரவணகுமாரை சந்திக்க செல்லும் கல்பனாவுக்கும், நாகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், சம்பவத்தன்றும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றவே, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது கல்பனா, நாகேஸ்வரியின் தலையில் பலமாக கடித்ததால், காயமடைந்த நாகேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கல்பனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version