பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசம் 21ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 ஆயிரத்து 431 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதுவரை 1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்று மாலை வரை  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காதவர்கள் 21ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.

Exit mobile version