திருப்பதி கோவிலில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா குடும்பத்துடன் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து இன்று காலையும் குடும்பத்தினருடன் எடியூரப்பா சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்தை தொடர்ந்து மண்டபத்தில் தேவஸ்தானம் அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி இறைவனை வழிபட்டதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version