பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது மாடல் அழகி சனம் காவல்துறையில் புகார்

தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மூலம் புகழ் அடைந்த தர்ஷன் மீது மாடல் அழகி சனம் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்…

தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்கள் மத்தியில் பரிட்சையமானவர் தர்ஷன். இலங்கைத் தமிழரான இவர் மாடலிங் துறையில் இருக்கும்போது மாடல் அழகியான ஷனம் பிரசாத்துடன் காதல் வயப்பட்டுளார். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 மே மாதம் 12ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது, அதன் பிறகு தர்ஷன் தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்க உள்ளதால் நமக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது வெளியே தெரிய வேண்டாம் எனவும், அப்படி தெரிந்தால் தனக்கு உள்ள பெண் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று ஷணத்திடம் கூறியுள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த ஷனம் பல நாள் காத்திருப்பிற்குப் பிறகு திருமணம் குறித்து தர்ஷனிடம் கேட்க, அவர் திருமணம் வேண்டாம் என மறுத்துள்ளார். இதனால் மனமுடைத்த ஷனம் தர்ஷன் மீது புகார் அளிக்க காவல் ஆணையர் அலுவலகம் சென்றார். அவர் கூறிய புகாரில் தர்ஷன் புகழ்பெற இதுவரை தனது சொந்த பணம் 15 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், தற்பொழுது தர்ஷன் தன்னைதிருமணம் செய்துகொள்ள தனக்கு தகுதி இல்லை என கூறுவதாகவும் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தன்னோட குணம் சரியில்லை என்றும் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் எனக்கு தகாத உறவு இருப்பதாக கூறிவருகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த எனது  தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அவர் மீது ஏமாற்றுதல், கொலைமிரட்டல், நம்பிக்கை துரோகம், பெண்களுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்… சனம் தர்ஷன் மீது கூறிய புகார்களுக்கு காவல்துறையினர் எந்த வகையான நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தன பார்க்கவேண்டும்.

Exit mobile version