தூய்மை இந்தியா குறித்து நடனம் ஆடி விழிப்புணர்வு பிரச்சாரம்

கடலூரில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து நடனம் ஆடி நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நெய்வேலி ஆர்ச்கேட் அருகே என்.எல்.சி இந்தியா நிறுவனம் சார்பில், தூய்மை இந்தியா திட்டத்திற்காக, கல்லூரி மாணவர்கள் நடனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர். என்.எல்.சி. இந்தியா நிறுவன சமூக பொறுப்புணர்வு துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கினர். மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி விழிப்புணர்வு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. இதில், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version