டான்ஸ் சாமியாரின் காம லீலைகள்

 

இது கற்பனையில் வரைந்த காட்சி அல்ல. உண்மை சம்பவம். அன்றைய நாளில் சாமியார் இருவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சண்டையிட்டு கொள்ள, அதனை பிரதியெடுத்து திரைப்படத்தில் காட்சியாக வைக்கப்பட்டது. அதில் அடி கொடுப்பவர் பெயர் யாகவா முனிவர். அடி வாங்குபவர்…. வேறு யார் நமது சிவசங்கர் பாபாதான்.

ஆயிரம் அடி வாங்கிய அபூர்வ சிகாமணியான சிவசங்கர் பாபா, அந்த அடி மூலமே புகழ்பெற்றார். தன் சொற்பொழிவை கேட்க வந்த அப்பாவி ஒருவரை ஏமாற்றி, சென்னை கேளம்பாக்கத்தில் பல ஏக்கர் நிலத்தை பட்டா போட்டார். பின்னர் அதில் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில், உண்டு உறைவிட பள்ளி ஒன்றை நிறுவி, தற்போது வரை சுக வாழ்வு வாழ்ந்து வருகிறார்.

30 ஆண்டுகளாக தன்னை கடவுள் என்று கூறி சல்லாபம் செய்த போதும், பலரால் சாமியாராகவே வணங்கப்பட்ட சிவசங்கர் பாபா, தற்போது பல நாள் திருடனாக அகப்பட்டுள்ளார். அவர் நடத்திய பள்ளியில், 5 முதல் 12 ம் வகுப்பு வரை படித்த மாணவி ஒருவர், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

10 ஆம் வகுப்பு படித்த போது, மாணவியை தனியாக அழைத்த சிவசங்கர் பாபா, தன்னை லார்ட் கிருஷ்ணா என்றும், முந்தைய பிறப்பில் நீ கோபிகா என்றும் கூறி, அவருடன் உறவு கொள்ள தன்னை நிர்பந்தித்தாகவும், தான் சம்மதிக்காமல் தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 12 ஆம் வகுப்பு படித்த போது ஏராளமான மாணவிகளை மூளைச்சலவை செய்து, தன்னை கடவுள் என நம்பவைத்து, சிவசங்கர் பாபா கூட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை தான் பார்த்ததாக, பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் சிவசங்கர் பாபாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில், 4 பேர் கொண்ட குழுவினர், பள்ளியில் சோதனை நடத்தினர். தனது முன்மாதிரி நித்யானந்தா போல, சிவசங்கர் பாபா தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் நிலையில், வருகிற 11 ம் தேதி விசாரணைக்கு சிவசங்கர் பாபா நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளாக, ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை மூளைச்சலவை செய்து, சுக வாழ்வு வாழ்ந்து, கோடிகளை குவித்த சிவசங்கர் பாபாவின் ராம ராஜ்ஜியம், தற்போது எழுந்துள்ள பாலியல் புகாரால் ஆட்டம் கண்டுள்ளது.

நியூஸ் ஜெ செய்திகளுக்குகாக செய்தியாளர் கதிரவனுடன், ராம்.

Exit mobile version