நாமக்கலில் கனமழையால் பயிர்கள் சேதம்

நாமக்கல் மாவட்டத்தில் கனமழையால் எற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி மற்றும் வடுகம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நீர் தேங்கி, பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால், வனச்சரபங்களா சாலையில் உள்ள தரைப்பாலம், இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version