காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பிற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என, குமரி மாவட்ட தேனீ உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த தேனீ உற்பத்தியாளர்கள் சீசனுக்கு ஏற்றார்போல் கேரளா, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேனீ பெட்டிகளை எடுத்துச்சென்று தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு கால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கேரளாவில் தேன் உற்பத்தி நலிவடைந்துள்ளதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.