மூணாறு அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையால் வீடுகள் சேதம்

மூணாறு அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை ஒன்று இரண்டு வீடுகளை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடுக்கி மாவட்டம் பூப்பாறை சுண்டல் பகுதியில் மதிகெட்டான் சோலை வனத்தில் இருந்து இறங்கிய அறிக்கொம்பன் என்று அறியப்படும் ஒற்றை யானை, சுண்டல் பகுதி குடியிருப்புக்குள் நுழைந்தது. அங்கு குடியிருக்கும் வேல்மயில், ஆரோக்கியசாமி ஆகிய இருவரது வீட்டை இடித்து  துவம்சம் செய்தது.  

யானை வீட்டை இடித்து கொண்டிருந்தபோது, அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லை. அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விடும் யானையால் அச்சத்தில் வாழ்வதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version