43 ஆயிரமாக குறைந்த இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 43 ஆயிரமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 71 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில், கொரோனா வைரசுக்கு 955 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

52 ஆயிரத்து 299 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 4 லட்சத்து 85 ஆயிரத்து 350 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 35 கோடியே 12 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Exit mobile version