தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்து காணப்படுகிறது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் தேதி மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 993ஆக இருந்த நிலையில், நேற்று முன்தினம்17 ஆயிரத்தை கடந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று, அதன் எண்ணிக்கை 17 ஆயிரத்து 121ஆக உயர்ந்தது.

12 வயதிற்குட்பட்ட 81 சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று உச்சபட்சமாக 222 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் 226 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 116 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 107 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version