தமிழ்நாட்டில் தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிரித்து வருவதால் மக்கள் அச்சம்

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்தாலும், பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேர் உட்பட, புதிதாக 8 ஆயிரத்து 633 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 89 ஆயிரத்து 9 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 882 பேர் ஆண்கள் என்றும், 3 ஆயிரத்து 751 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 492 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 141ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 89 பேரும், ஈரோட்டில் 964 பேரும், சேலத்தில் 541 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று, திருப்பூரில் 481 பேரும், தஞ்சாவூரில் 367 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 ஆயிரத்து 860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 287 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 145 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Exit mobile version