தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையை விட கோவையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 28 ஆயிரத்து 864 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சத்து 5 ஆயிரத்து 546 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 238 பேர் ஆண்கள் என்றும், 12 ஆயிரத்து 626 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 2 ஆயிரத்து 689 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 175 ஆக அதிகரித்தது.

கோவையில் 3 ஆயிரத்து 537 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 784 பேரும், திருப்பூரில் ஆயிரத்து 496 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் ஆயிரத்து 295 பேரும், செங்கல்பட்டில் ஆயிரத்து 194 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

32 ஆயிரத்து 982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 493 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

 

Exit mobile version