தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, முதன்முதலாக சென்னையை விட கோவையில் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 33 ஆயிரத்து 764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சத்து 10 ஆயிரத்து 224 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 18 ஆயிரத்து 713 பேர் ஆண்கள் என்றும், 15 ஆயிரத்து 51 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 3 ஆயிரத்து 561 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 203ஆக அதிகரித்தது.

கோவையில் 4 ஆயிரத்து 268 பேரும், திருப்பூரில் ஆயிரத்து 880 பேரும், திருச்சியில் ஆயிரத்து 775 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் ஆயிரத்து 642 பேரும், மதுரையில் ஆயிரத்து 538 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

29 ஆயிரத்து 717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 475 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Exit mobile version