50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தினசரி பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 50 ஆயிரத்தை நெருங்கி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் புதிதாக 47 ஆயிரத்து 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில், கேரளாவில் மட்டும் 32 ஆயிரத்து 803 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 509 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது.

35 ஆயிரத்து 181 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

3 லட்சத்து 89 ஆயிரத்து 583 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 66 கோடியே 30 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Exit mobile version