மீண்டும் 37 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், கேரளாவில் மட்டும் 24 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 25 லட்சத்து 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 648 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.

34 ஆயிரத்து 169 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

3 லட்சத்து 22 ஆயிரத்து 327 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 59 கோடியே 55 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Exit mobile version