40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஐந்து நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

கடந்த 7ம் தேதி 33 ஆயிரத்து 703 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இன்று 37 ஆயிரத்து 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், கொரோனா வைரசுக்கு 724 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 764ஆக உயர்ந்துள்ளது. 39 ஆயிரத்து 649 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

4 லட்சத்து 50 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 37 கோடியே 73 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரதுறை வெளியிடு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version