இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள போதிலும், குணமடைந்தோர் சதவீதம் 90ஆக உயர்வு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள போதிலும், குணமடைந்தோர் சதவீதம் 90ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 3 ஆயிரத்து 847 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்து 235ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 24 லட்சத்து 19 ஆயிரத்து 907 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், இதுவரை 20 கோடியே 26 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 90ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version