தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்டார் அமிதாப் பச்சன்

திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெற்றுக் கொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பாக, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்திருந்தார். அப்போது, அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. இந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து அமிதாப் பச்சன் அந்த விருதை இன்று பெற்றுகொண்டார். திரைப்படத்துறையில் மிக பிரபலமான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version