“கையை வெட்டுவேன்” என சர்ச்சையாக பேசிய டி.ஆர்.பாலு !

திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அடியாட்கள் போல நடந்துகொள்ளும் சம்பவங்கள் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. அவற்றை பார்த்து மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஆளுநரையே அடிப்போம் என்று பகிரங்கமாக எச்சரித்த அந்த கட்சியின் அடாவடிகள் தொடரும் நிலையில் திமுக எம்.பி.யும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர். பாலு மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் மாநாட்டில் பங்கேற்று பேசுகையில் வெட்டுவேன், குத்துவேன் என்று தனது புஜபலத்தை காட்டும் வகையில் பேசியுள்ளார். அதாவது தான் எப்போதும் முரடன்தான் என்றும், தன்னால் தவறுகளை பொறுத்துக்கொள்ளமுடியாது என்றும் கூறிய அவர், தமக்கு திருப்பி அடிக்கும் பலம் இருப்பதாகவும் கூறினார். தாம் ஒரு முரடன் என்று கூறிய அவர், தன் கட்சித்தலைவரை திட்டினால், தீண்டினால், தன்னால் பொறுக்க முடியாது என்றும் வீரமணியை அடிக்க யாராவது வந்தால் கையை வெட்டுவேன் என்றும் பகிரங்கமாக எச்சரித்தார்.

Exit mobile version