வீட்டில் சிங்கம் வளர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடுமை…

செக் குடியரசில் வசித்து வரும் “மைக்கேல் பிராசெக்” என்ற இளைஞர் தனது வீட்டில் ஆண் சிங்கம் ஒன்று, பெண் சிங்கம் ஒன்று என இரண்டு சிங்கங்களை வளர்த்து வந்தார். அரசு அனுமதியில்லாமல், அவர் வளர்த்து வந்த சிங்கங்களே அவரை அடித்து கொன்றுள்ளது. இந்த தகவலை அறிந்து, உடலை மீட்க வந்த அரசு அலுவலர்களை அந்த இரு சிங்கங்களும் விடவில்லை.

இந்நிலையில் வேறு வழியின்றி அதிகாரிகள் அந்த இரு சிங்கங்களையும் சுட்டுக் கொன்றதாகவும், இரு சிங்கங்களை அங்கே அதிகாரிகள் புதைத்தாக தகவல் வெளியாகியுள்ளன.  இறுதியில் அந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டது.

Exit mobile version