"தோற்று விடுவோம் என உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக அரசு அஞ்சுகிறது" – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக அரசு அஞ்சுவதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த எண்டியூரில், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மரக்காணம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, அதிமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கஜனாவில் பணம் இல்லை எனக் கூறி திமுக கை விரிப்பதாக விமர்சித்தார்.

Exit mobile version