1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

இலங்கையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட சுமார் 1 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த 4 பயணிகள் தங்களின் ஆடைகளுக்குள்,மறைத்து வைத்து, சுமார் 1 கிலோ 100 கிராம் மதிப்புடைய தங்கக் கட்டிகளை கடந்திவந்துள்ளனர். அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது பறிமுதல் செய்தனர். கடத்திய நால்வரும் சென்னை மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 36 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. கடத்தல்காரர்களை கைது செய்த காவல்துறையினர், கடத்தல் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version