திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசியாவில் இருந்து திருச்சி வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானம் மற்றும் மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளிடம் அவர்கள் சோதனை நடத்தினர்.

Exit mobile version