நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி இடமாற்றம்

ஐ.பி.எல். இறுதி போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டியின் இறுதி போட்டி மே 12 ஆம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் இருந்து ஐதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்திற்கு இந்தப் போட்டி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 3 கேலரிகளுக்கு மாநகராட்சி அனுமதி அளிக்காத நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் கூறியுள்ளது. இறுதி போட்டி மாற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலாக முதல் தகுதி சுற்று போட்டி சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version