தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 3 பேர் உட்பட புதிதாக 20 ஆயிரத்து 421 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 44 ஆயிரத்து 289 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 227 பேர் ஆண்கள் என்றும், 9 ஆயிரத்து 194 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் ஆயிரத்து 644 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 777 ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 645 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 694 பேரும், சேலத்தில் ஆயிரத்து 71 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் ஆயிரத்து 68 பேரும், தஞ்சாவூரில் 875 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

33 ஆயிரத்து 161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 434 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 268 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 166 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Exit mobile version