இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 37ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்று கூடுதலாக 6 ஆயிரம் பேருக்கு கூடுதலாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் மட்டும் 25 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 369 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 411 ஆக உயர்ந்துள்ளது. 39 ஆயிரத்து 114 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 3 லட்சத்து 91 ஆயிரத்து 256 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 70 கோடியே 75 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 13 நாட்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Exit mobile version