இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 909 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில், கேரளாவில் மட்டும் 29 ஆயிரத்து 836 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் ஒரு நாள் கொரோனா பாதிப்பில் 70 சதவீதத்திற்கு அதிகமானோர் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது. 34 ஆயிரத்து 763 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 3 லட்சத்து 76 ஆயிரத்து 324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 63 கோடியே 43 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Exit mobile version